சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சம்
சுரைக்காய்
(LEGENARIA VULGARIS)
ஆயுர்வேத மருத்துவம்
கொழுந்து இலை : இதனால் உடலின் நீர் இறங்கும். வீக்கம் போகும். சோம்பல், வாதம், பித்தம், கபம் போன்ற பிணிகள் நீங்கும். பேதியும் ஆகும். இலையால் சுவையற்ற தன்மை, ஈரல் நோய்கள், மார்பு நோய், உண்டாகும், உடல் சூடு தணியும். இலையால் வீக்கம், நீர்க்கட்டு போகும். கொடியால் வெறி நோய்கள் போகும்.
மற்ற பயன்கள் : சுரைக் கீரையை உள்ளிப்பூண்டு சேர்த்து சமைத்து 41 நாட்கள் சாப்பிட்டால், அல்லது கொடியை மட்டும் குடிநீர் செய்து குடித்தால் நலம் தரும்.
* இலையை குடிநீரிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்குக் கொடுக்கலாம். கொடியை குடிநீரிட்டு, வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு இவற்றிற்குக் கொடுக்கலாம்.
* கொடிகள், சிறுநீரை பெருக்கச் செய்யும் குடிநீர்களில் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன.
* சுரைக்காய் குடுக்கையை சுட்ட கரியை, இரசவேக்காட்டுக்கு கொடுக்கப்படுகிறது. காட்டுச்சுரைக்காய் சாம்பலுடன், தேன் சேர்த்துக் கண்ணில் இட மாலைக்கண் நோய் போகும். இதன் சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கண்டமாலைக்குப் போட குணமாகும்.
இயல்பு : குளிர்ச்சி, ஈரம்.
முக்கிய குணங்கள் : இது விரைவாக ஜீரணிக்கும் தன்மை உடையது. இதைக் குறைந்த அளவில் உணவாகப் பயன்படுத்துவார்கள். சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஈரத்தைத் தருகிறது. இரத்தம் மற்றும் பித்தக் கொதிப்பைத் தணிக்கிறது.
பயன்படுத்தும்முறை : இதை அதிகளவில் தனியாகவோ அல்லது இறைச்சியுடன் கலந்தோ சமைத்து உண்பதற்குப் பயன்படுத்துவார்கள். பித்த குணமுடையவர்களுக்கு குறிப்பாக பித்தம், ஜுரம், இருமல், காசநோய், பைத்தியம், மூளைநோய் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.
இது குளிர்ச்சி மற்றும் ஈரம் கொண்ட தன்மையால், உஷ்ணத்தால் உண்டாகும் தலைவலி, பைத்தியம், ஒரு வித மூளை நோய்க்கு இதன் மேல்தோலையும் உள்சதையையும், தலையில் பற்றாகப் போடுவார்கள். மேலும், உடல் உஷ்ணம் மற்றும் தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது. இலேசான வயிற்றுவலியையும் உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது.
அளவு : சாறு 40 மில்லி கிராம் முதல் 80 மில்லி கிராம் வரை.
தீய விளைவுகள் : இலேசான வயிற்று வலியையும், உப்புச்சத்தையும் உண்டாக்குகிறது. இத்துடன் ஊதே ஹிந்த் மற்றும் கரன்ஃபல் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
சுரைக்குடி சிவன் கோயில் தலவிருட்சமாக சுரை வணங்கப்படுகிறது. சுரையின் அறிவியல் பெயராக “லிகேனரியா வல்கரிஸ்” (LEGENARIA VULGARIS) என அழைக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பயிராகிறது. 2 வகையாக காணப்படுகிறது. அவை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். காட்டுச்சுரை, பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மொத்தத்தில் மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது.

No comments:
Post a Comment