Wednesday, August 18, 2010

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

தண்ணீர்‘நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கம்
வானின்று அமையாது ஒழுக்கு’
என்னும் குறளின் வாக்கிற்கேற்ப இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாக கருதப்பட்டு உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக துணை நிற்கின்றன என்பதை அனைவரும் நன்கு அறிவோம். வையகம் முழுவதும் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் கடல் நீரால் சூழப்பட்டு உப்புத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப, நமது அன்றாட உணவிற்கு அத்தியாவசியமான தேவை உப்புதானே! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் உப்பு தேவையான அளவில் சேர்க்காவிட்டால் உணவருந்த முடியுமா?
அதிலும் சாதாரணமாக தாகம் எனும் நாவரட்சி ஏற்படும்போதோ அல்லது மயக்கம், விக்கல், களைப்பு போன்றவற்றிற்குத் தண்ணீர் உடனடி, நிவாரணமாக உயிர் காக்கும் அருமருந்தாகும்.
பொதுவாக நீரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், அயோடின், போன்றவை இயற்கையிலேயே நிறைந்திருப்பதால், பல்வேறு வகைகளில் நமக்கு பயன்தருபவையாகும். முக்கியமாக ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், உடற் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வாழவும் வைக்கின்றது. எனினும் விஞ்ஞான யுகத்தில் வாழ்கின்ற இன்றைய நாகரிக உலகில், தண்ணீர் எவ்வாறெல்லாம் மாசுபடுத்தப்பட்டு எண்ணற்ற தொற்று நோய்களுக்கும், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது என்பதை விவரிக்க வேண்டுமாகில், அதற்கென ஒரு தனி கட்டுரை தான் எழுத வேண்டும். அந்த அளவிற்கு தொழிற்புரட்சி, சுற்றுப்புற சுகாதார சீர்கேடுகள், இயற்கையை மாசுபடுத்தி, ஓசோன் எனும் வாயு மண்டலத்தையும் ஓட்டையாக்கி இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகிக் கொண்டு வருகிறோம்.
எதிர்கால சந்ததியினர் நல்ல காற்றும், நல்ல தண்ணீரும் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கூறியிருக்கின்றனர். பொதுவாக கழிவுப் பொருட்களின் தாக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மழைக்காலங்களில் நீர் ஓட்டத்தினால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள், தூசுகள் போன்றவைதான் பல்வேறு இடங்களில் தேங்கி, தொற்று நோய்க் கிருமிகளான பேக்டிரியா, வைரஸ் மற்றும் பல்வேறு நோய்க் கிருமிகள் வளரவும் பெருகவும் வழி வகுக்கின்றன. எனவே குடிநீர் என்றவுடன் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகும்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவ குறிப்பு கூறுகின்றது. பொதுவாக அனைவரும் பெரும் கேன்களிலும், பாட்டில்களிலும் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே அன்றாடம் உபயோகிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள பைப் லைன்களில் துரு போன்ற அசுத்தம் அல்லது ஓட்டை ஏற்பட்டு வேறு நோய் தரக்கூடிய பொருட்கள் கலக்க வாய்ப்புகள் இருக்கின்றபடியால், குடிநீரைப் பொறுத்தவரையில் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.
இயற்கை தரும் மழைநீர் என்பது மிகவும் சுத்தமானது. ஆனால் அதை சேமித்து பாதுகாக்கும் நீர்த்தொட்டிகள் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மாசுத்தன்மை உண்டாகி, அதை தெரியாமல் பயன்படுத்தும்போது பல்வேறு கொடிய நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. அந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேலே எழும்பி மேகங்களாக மாறி, அதில் குளிர்ந்த காற்று பட்டவுடன் மழையாகவும், பனியாகவும் பெய்து பூமிக்கு நீர் வளமும் சேர்த்து, அந்த உப்புத் தண்ணீரை நன்னீராக மாற்றி நமக்கெல்லாம் குடிப்பதற்கான தண்ணீரை வழங்குகின்றது. இது இயற்கை நமக்கு செய்துவரும் அற்புத உதவியாகும். ஆகவே நாம் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது, நாம் குடிக்கும் நீரை ஓரளவிற்கு சுட வைத்து, ஆற வைத்து வடிகட்டி அருந்தினால், எந்தவித நோயும் ஏற்படாது.
வெறும் வயிற்றில் காலைப்பொழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீரும் அதுபோன்றே காலை உணவு, மதிய உணவு, இரவு விருந்து மற்றும் படுக்கப் போகும் முன் இரண்டு டம்ளர் நீர் அவசியம் பருகுவதை பழக்கமாய் வைத்திருந்தால் நல்ல ஆரோக்கியம், நல்ல நித்திரை, பசி, ஜீரணம், தெம்பு சுறுசுறுப்பு மற்றும் உடல் பலம் ஆகியவை சீராக அமைவதோடு மற்றும் பல்வேறு பழங்களான மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, கன்டலோப், வெள்ளரி, போன்றவற்றிலும், அதைப்போன்றே காய்கறி மற்றம் கீரை வகைகளிலும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. இவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அடிக்கடி உணவாகப் பயன்படுத்தி தேக ஆரோக்கியத்திற்கு கூடுதல் பயன்பெற முடியும்.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காய் இருக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும், ஒரு சில உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அடிக்கடி நீர் அருந்துவது என்பது இன்றியமையாததாகும். நமது ஊரில் செப்புக் குடங்கள், வெள்ளிக் குடங்கள் மற்றும் பானைகளில் சுத்தமான நீரை நிரப்பி அன்றாடம் பயன்படுத்துவதை நாம் அறிந்ததே. அதன் பயன் என்பது உலோகப் பொருளான இவற்றால் நமக்கு தேவையான தாமிர, வெள்ளி ஆகியவற்றின் சக்தியை அளிப்பதோடு உடலை குளிர்ச்சியாகப் பாதுகாக்கவும் துணை புரிகின்றன. தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே என்ற முன்னோர்கள் பழமொழிக்கேற்ப, தண்ணீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து, அதன் மருத்துவ குணத்தினால் ஏற்படும் பயன்கள் கருதி, கூடுமானவரை நீரை சுட வைத்து, வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்றளவில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்க.

உடல் பருமனா?

ருபது வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயது ஆண், பெண்களும் உடல் பருமனாகாமலும் அதே நேரத்தில் ஸ்டிரோக் அபாயம் ஏற்படாமலும், வாழ, கோதுமை உப்புமா, கொண்டைக்கடலை, பால், தயிர் ஆகியவற்றை தினமும் சேர்த்து வரவேண்டும். இதிலிருந்து கிடைக்கும் கால்சியமும் ஈ வைட்டமின்னும் நார்ச் சத்தும் ஸ்டிரோக், நீரிழிவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கும். மதிய உணவில் முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, காரட், தேன், எலுமிச்சம் பழச்சாறு முதலியவற்றைத் தவறாமல் சேர்க்க வேண்டும். இதில் கிடைக்கும் ‘பி’ வைட்டமின்களும், முட்டைக்கோஸில் உள்ள அமிலமும் உடலைப் பருமனாகாமல் பார்த்துக் கொள்கிறது. சோயமாவு, ராகி மாவு முதலியவற்றை வாரம் 5 நாள் காலை உணவாகக் சேர்க்க வேண்டும். அரிசி, கோதுகை மாவு போன்றவை வாரம் ஒரு நாள் போதும்.
உடல் பலவீனமாக இருந்தால் காலையில் பழங்கள் மட்டும் சாப்பிடவும். மதியம் மொச்சையும், இரவில் பேரீச்சம்பழமும் மற்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் போதும். சூரியகாந்தி எண்ணெயில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

ஞாபகசக்தி அதிகரிக்க!

மஞ்சள் காமாலை விரைந்து குணமாக!
மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். தாது உப்புக்களும் வைட்டமின் ஏயும் கல்லீரலைக் குணமாக்கும். இதனால் மஞ்சள் காமாலை நோய் விரைந்து குணமாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு வேறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் போதும் மாதுளம் பழங்களும், இளநீரும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை விரைந்து குணமாகும்.மீன் சாப்பிடலாம்!
ஜப்பானிய மக்கள் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் டன் எடையுள்ள மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிடுகின்றனர். கடல் உணவு வகைகள் சாப்பிடுவதில் இன்று ஜப்பானியர் தான் முதலிடத்தில் உள்ளனர். கடல் உணவுகளில் உள்ள துத்தநாக உப்பால் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கூடி இரத்தத்தில் கொலாஸ்டிரல் உயர்வு குறைக்கப்படுகிறது. மீன் அதிகம் சாப்பிட்டாலும் இரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இதயத்திற்கு இதமாக மீன் உணவு இருக்க அன்றைய தினம் பசலைக்கீரை, அவரைக்காய், காலிஃபிளவர் போன்றவற்றில் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் சோயா மொச்சையையும் மீன் உணவுடன் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால், மீனிலிருந்து போதுமான அளவே துத்தநாக உப்பு உடலில் உறிஞ்சப்படுகிறது. மீதி வெளியேற்றப்படுகிறது. ஆக, மீன் உணவையும் சத்தாகப் பயன்படுத்திக் கொள்ள காய்கறி ஒன்றும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

‘நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கம்
வானின்று அமையாது ஒழுக்கு’
என்னும் குறளின் வாக்கிற்கேற்ப இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாக கருதப்பட்டு உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக துணை நிற்கின்றன என்பதை அனைவரும் நன்கு அறிவோம். வையகம் முழுவதும் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் கடல் நீரால் சூழப்பட்டு உப்புத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப, நமது அன்றாட உணவிற்கு அத்தியாவசியமான தேவை உப்புதானே! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் உப்பு தேவையான அளவில் சேர்க்காவிட்டால் உணவருந்த முடியுமா?
அதிலும் சாதாரணமாக தாகம் எனும் நாவரட்சி ஏற்படும்போதோ அல்லது மயக்கம், விக்கல், களைப்பு போன்றவற்றிற்குத் தண்ணீர் உடனடி, நிவாரணமாக உயிர் காக்கும் அருமருந்தாகும்.
பொதுவாக நீரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், அயோடின், போன்றவை இயற்கையிலேயே நிறைந்திருப்பதால், பல்வேறு வகைகளில் நமக்கு பயன்தருபவையாகும். முக்கியமாக ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், உடற் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வாழவும் வைக்கின்றது. எனினும் விஞ்ஞான யுகத்தில் வாழ்கின்ற இன்றைய நாகரிக உலகில், தண்ணீர் எவ்வாறெல்லாம் மாசுபடுத்தப்பட்டு எண்ணற்ற தொற்று நோய்களுக்கும், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது என்பதை விவரிக்க வேண்டுமாகில், அதற்கென ஒரு தனி கட்டுரை தான் எழுத வேண்டும். அந்த அளவிற்கு தொழிற்புரட்சி, சுற்றுப்புற சுகாதார சீர்கேடுகள், இயற்கையை மாசுபடுத்தி, ஓசோன் எனும் வாயு மண்டலத்தையும் ஓட்டையாக்கி இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகிக் கொண்டு வருகிறோம்.
எதிர்கால சந்ததியினர் நல்ல காற்றும், நல்ல தண்ணீரும் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கூறியிருக்கின்றனர். பொதுவாக கழிவுப் பொருட்களின் தாக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மழைக்காலங்களில் நீர் ஓட்டத்தினால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள், தூசுகள் போன்றவைதான் பல்வேறு இடங்களில் தேங்கி, தொற்று நோய்க் கிருமிகளான பேக்டிரியா, வைரஸ் மற்றும் பல்வேறு நோய்க் கிருமிகள் வளரவும் பெருகவும் வழி வகுக்கின்றன. எனவே குடிநீர் என்றவுடன் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகும்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவ குறிப்பு கூறுகின்றது. பொதுவாக அனைவரும் பெரும் கேன்களிலும், பாட்டில்களிலும் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே அன்றாடம் உபயோகிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள பைப் லைன்களில் துரு போன்ற அசுத்தம் அல்லது ஓட்டை ஏற்பட்டு வேறு நோய் தரக்கூடிய பொருட்கள் கலக்க வாய்ப்புகள் இருக்கின்றபடியால், குடிநீரைப் பொறுத்தவரையில் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.
இயற்கை தரும் மழைநீர் என்பது மிகவும் சுத்தமானது. ஆனால் அதை சேமித்து பாதுகாக்கும் நீர்த்தொட்டிகள் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மாசுத்தன்மை உண்டாகி, அதை தெரியாமல் பயன்படுத்தும்போது பல்வேறு கொடிய நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. அந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேலே எழும்பி மேகங்களாக மாறி, அதில் குளிர்ந்த காற்று பட்டவுடன் மழையாகவும், பனியாகவும் பெய்து பூமிக்கு நீர் வளமும் சேர்த்து, அந்த உப்புத் தண்ணீரை நன்னீராக மாற்றி நமக்கெல்லாம் குடிப்பதற்கான தண்ணீரை வழங்குகின்றது. இது இயற்கை நமக்கு செய்துவரும் அற்புத உதவியாகும். ஆகவே நாம் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது, நாம் குடிக்கும் நீரை ஓரளவிற்கு சுட வைத்து, ஆற வைத்து வடிகட்டி அருந்தினால், எந்தவித நோயும் ஏற்படாது.
வெறும் வயிற்றில் காலைப்பொழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீரும் அதுபோன்றே காலை உணவு, மதிய உணவு, இரவு விருந்து மற்றும் படுக்கப் போகும் முன் இரண்டு டம்ளர் நீர் அவசியம் பருகுவதை பழக்கமாய் வைத்திருந்தால் நல்ல ஆரோக்கியம், நல்ல நித்திரை, பசி, ஜீரணம், தெம்பு சுறுசுறுப்பு மற்றும் உடல் பலம் ஆகியவை சீராக அமைவதோடு மற்றும் பல்வேறு பழங்களான மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, கன்டலோப், வெள்ளரி, போன்றவற்றிலும், அதைப்போன்றே காய்கறி மற்றம் கீரை வகைகளிலும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. இவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அடிக்கடி உணவாகப் பயன்படுத்தி தேக ஆரோக்கியத்திற்கு கூடுதல் பயன்பெற முடியும்.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காய் இருக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும், ஒரு சில உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அடிக்கடி நீர் அருந்துவது என்பது இன்றியமையாததாகும். நமது ஊரில் செப்புக் குடங்கள், வெள்ளிக் குடங்கள் மற்றும் பானைகளில் சுத்தமான நீரை நிரப்பி அன்றாடம் பயன்படுத்துவதை நாம் அறிந்ததே. அதன் பயன் என்பது உலோகப் பொருளான இவற்றால் நமக்கு தேவையான தாமிர, வெள்ளி ஆகியவற்றின் சக்தியை அளிப்பதோடு உடலை குளிர்ச்சியாகப் பாதுகாக்கவும் துணை புரிகின்றன. தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே என்ற முன்னோர்கள் பழமொழிக்கேற்ப, தண்ணீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து, அதன் மருத்துவ குணத்தினால் ஏற்படும் பயன்கள் கருதி, கூடுமானவரை நீரை சுட வைத்து, வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்றளவில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்க.

இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

Healthy life
banana.jpgஇதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
பிச்சையிடுவது தவறு. இது சோம்பேறிகளை உருவாக்கும் என்று சொல்வது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
ஆதரவற்ற இந்தத் தாய்க்கு இவரது பிள்ளைகளால்கூடக் கைவிடப்பட்ட நிலையில், நம்மைப் போன்றவர்கள் உதவாவிட்டால் பிறகு யார் உதவப் போகிறார்கள் என்று பார்ப்பது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
ஊழியர் தவறு செய்கிறார். தவறு செய்பவர்களுக்கு வளைகுடா நாடுகளின் பாணியில் சவுக்கடிதான் சிறந்த வழி என்பது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
தவறுவது மனித இயற்கை; மன்னிப்பதே பேராண்மை அப்போதுதான் அவன் திருந்துவான் என்று வாய்ப்பு வழங்குவது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.
தவறுகள் அதிகரித்துவரும் (குற்றம் வேறு தவறு வேறு) இவ்வேளையில் இதயக் கண்கொண்டு பார்ப்பதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது, அவரவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்யப்படவேண்டிய விஷயம்.
ஏமாற்றுபவனுக்கு அடி உதை என்பது சில பண்ணையார்களின் பழக்கம். ஒரு சில செளகரியங்களைக் குறைப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் உடல் தழும்பு மறைந்தும் மனத் தழும்புகள் மறையாதவர் எத்துணையோ பேர் அவர்கள். இவர்களைப் பழிவாங்காமல் இருப்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?
மகன்-மகள்களின் தவறுகளை, ஒரு தந்தை அறிவுக்கண் கொண்டுதான் பெரும்பாலும் பார்க்கிறார். தாயோ இதயக் கண்கொண்டு பார்க்கிறார். உங்களைக் கேட்கிறேன். தந்தை திருத்திய பிள்ளைகள் அதிகமா, தாய் திருத்திய பிள்ளைகள் அதிகமா?
சட்டம் அறிவின் வழியே சிந்திக்க மட்டுமே தெரிந்தது. அதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதுவும் தேவைதான். இதற்கு முன் இதயத்தின் கண்கொண்டு ஒருமுறை பார்ப்பதும் நல்லது.

முதலை வாகனம் விற்பனைக்கு!

gatorbike.jpg
முதலைகளின் மோசமானது அலிகேட்டர். இறந்துபோன அலிகேட்டர் ஒன்றின் தோல் மற்றும் உடல் பாகங்களை மண்ணில் புதைத்து ஒன்றுக்கும் உதவாமல் போகச்செய்வதை விட இரண்டு சக்கர வாகனத்தில் பொருத்தினால் என்ன? இப்படி யோசித்த ஜிம் ஜாப்லன் (45) கேட்டர் பைக் என்றழைக்கப்படும் இந்த இரண்டுசக்கர வாகனத்தை டிசைன் செய்தார்.
ப்ளோரிடாவில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வரும் இவர், விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு நன்கொடை வசூலித்துத் தரும் நோக்கத்தில் இந்த வித்தியாசமான வாகனத்தை
விற்பனைக்கு ம் விட்டிருக்கிறார். இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.36 லட்சம் தான் என்றாலும் நன்கொடை மூலம் ரூ.54 லட்சம் வரை திரட்ட திட்டம். அதற்காக இவர் இந்த வாகனத்தில் ஜம்மென்று ஏறிக்கொண்டு, தான் காப்பாற்றிய பர்மா மலைப்பாம்பையும் தோளில் சுற்றிக்கொண்டு வலம் வருகிறார். ரூ.5400 வீதம் 1000 சீட்டுகளை, பார்ப்பவரிடம் எல்லாம் வேகமாக விற்று வருகிறார் ஜாப்லன்.
10 அடி நீளமுள்ள இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முதலையின் உடல் பாகங்களில் தலையைத்  தவிர மற்றவற்றை கழட்டி எடுக்கமுடியும். தலையின் பின்பக்கத்தில்  வேகம் காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் குலுக்கலில் யாரோ ஒருவருக்கு சொந்தமாகப் போகிறது இந்த வித்தியாசமான மோட்டார் பைக்.